Monday, 21 April 2014

SURULI HILLS !






SURULI forest astonished me by just being as  it is for so many years.

The wholeness of forest is like a beautiful moon as the moon doesn't know how beautiful it is !
The divine radiance of  a forest taught   me a lot about the wholeness.

Forest never mind about its beauty as its beyond inferiority and superiority.The flow of water is flowing and flowing unmindful about its destination, just  truthful to its path.

The rare of tree's and the rarest of herbs just grow blossom and live! No claiming of its greatness!

That's the greatness of the wholeness.

The rarest of herbs though not visible spreads  its fragrance, the fragrance of those herbs  spreads meditative vibes and which also helps on getting rid of diseases and mental blocks.

Thousand's of leaves fall and the essence of herbs and trees in emerged with the pure water flow and the the essence of  those is also emerged in the gentle breeze of the holy forest.


O ..!  The joy of being inside the  forest   is indescribable!

And the joy of  living can be  understood when you understand the language of nature.

Surulihills - The essence of nature.!


சுருளிவனம்




பல்லாயிரம் ஆண்டுகளாய் உள்ள சுருளி வனத்தில் இருப்பதே என்னை மலைப்பிலும் பரவசத்திலும் ஆழ்த்துகிறதுஒரு வனத்தின் முழுமை,முழுநிலவைப்போல் அழகானது.

தான் எத்தனை அழகென்று முழுநிலவுக்குத் தெரியாதல்லவா!வனத்திலிருந்து வெளிப்படும் தெய்வீகப் பேரொளி முழுமை குறித்தெனக்கு பலவும் கற்பித்தது.
உயர்வு தாழ்வுகளுக்கு அப்பாற்பட்டிருப்பதால் வனம் எப்போதும் அழகு குறித்தெல்லாம் கவலைப்பட்டதில்லை ,
எங்கே போகிறோம் என்பதைப் பற்றிய கவலையின்றி போகும் பாதைக்கு மட்டும் உண்மையாய் இருந்தபடி நிகழ்ந்து கொண்டிருக்கிறது நீரின் பிரவாகம் .

தங்கள் மகிமைகள் குறித்த எவ்வித பிரஸ்தாபமும் இல்லாமல்அரிய வகை மரங்களும்,மிக அரிதான மூலிகைகளும் மலர்ந்து மணக்கின்றன....இதுவே முழுமையின் மகத்துவம்.

பார்வைக்குத் தெரியாத மகத்துவ மூலிகைகள் தங்கள் மணத்தைப் பரப்புகின்றன.அந்த அருள்மணம் வழியே தியானத்தின் அதிர்வுகள் பரவுகின்றன.அவையோ நோய்களும் மனத்தடைகளும் நீங்கிட பெரிதும் உதவுகின்றன.


ஆயிரமாயிரம் இலைகள் உதிர்கின்றன.மூலிகைகளின் சாரமும் மரங்களின் வேர்மணமும் தூய தீர்த்தத்தில் கலந்து பெருகி தெய்வீக வனத்தின் தென்றலிலும் கலந்து வருகின்றன.
!! வனத்திற்குள் இருக்கும் ஆனந்தம்,விவரிக்க இயலாதது.
இயற்கையின் பாஷை புரிபடும் போதெல்லாம்
இருப்பின் ஆனந்தமும் புரிகிறது.

சுருளிமலை-இதுவே இயற்கையின் சாரம்

Sunday, 20 April 2014

At Suruli hills !

Dear All ,

After every Maha Guru Puja  Sri balarishi makes a yatra to suruli hills to immerse the holy ashes of the yagnya 
in the suruli theertham !

Here we are sharing such wonderful moments in suruli hills with Sri Balarishi  taken on january 2014!

Followed by this post ! Sri balarishi sharing on suruli hills will follow  !



















Wednesday, 26 March 2014

 
எங்கும் நிறைந்திருக்கும் சிதம்பரம்
 
 
 
 

மயூரி 
 மா  தில்லை உமையும் ஒரு பாகனும் பதம் பதம் .

அவள் ஆடும்  மயூரி விரி கோலம் சிவலயம் லயம்

 

செந்பக மணமாடும் உள்ளோடும் காற்றின் சிற்றம்பல களம் களம்.

அவள் வாசம்  அது வாஞ்சை என் தேவியின் சிவ கோலம் அது நிரந்தரம் .

 

ருத்ர நாதம் வழி அவள்  லாஸ்யம் தரிக்க தரிக்க.... !
சங்கோசை ஓங்கரிக்க முழங்க ....!

ருத்ர வீணையின் ருத்ர ப்ரவாஹம் அதிர்ந்து இசைக்க ..

ஹர தாண்டவ ஹர தாண்டவ ஹர ஹர எனும் உடுக்கை வீச்சில் !
 
எங்கும் நிறைந்திருக்கும் சிதம்பரம்
 
 
 
 
 
Cosmic Dancer
( Transcreation of Sri Balarishi's Tamil Poem )
 
 
.



Uma of the magnificent Thillai and her soul mate
Set foot for the cosmic dance
Her hair spreads up in Shiva's rythm

The Chitrambala, filled with breeze
carrying fragrance of The  Shenbaga flowerss in  their dance court
Her love for Shiva is her abode and it is there forever
 
As her Laasya takes shape in tune with rudhra naadha,
 
The conch reverberates with Omkaara
 
As rudra pravahaa flows through rudra veena and vibrates,
Dumro bangs a rhythm "Hara thaandava hara  thaandava hara hara "

And Chidambaram manifests everywhere !!!


 

Friday, 3 January 2014

குருவாரம் குருவார்த்தை-54


அர்ப்பணிப்பு என்பது,எதிர்பார்ப்புகள் இல்லாதது.நீங்கள் மிகவும் விரும்பும் ஒன்றிற்கு உங்களையே அர்ப்பணிக்க நினைத்து விட்டீர்கள் என்றால்,நீங்கள் அதில் வெல்கிறீர்களோ இல்லையோ,வேகமாக முன்னேறுகிறீர்களோ அல்லது மெதுவாகச் செல்கிறீர்களோ,அது பற்றியெல்லாம் கவலையில்லாமல்,அந்தப் பாதையில் இருப்பதே உங்களுக்குப் பரவசம் கொடுக்கும்.


 



பலருக்கும் தங்கள் இலக்கை சென்றடைவதில் அவ்வளவு விருப்பம் இருக்கிறது.அதுவே அவர்களின் தாகமாகவும் இருக்கிறது.தங்கள் மொத்தக் கனவையும் அதில் செலுத்தியிருப்பார்கள்.கடுமையாக உழைத்தும் இருப்பார்கள்.அந்த இலக்கை எட்டிவிட்டால்,அடுத்தது என்னவென்று யோசிக்கத் தொடங்கி விடுவார்கள்.அடுத்த இலக்கை நோக்கி நடக்கத் தொடங்கி விடுவார்கள்.அப்படியானால் இலக்கு என்பது மாறக்கூடியது.ஆனால் அர்ப்பணிப்பு என்பது அப்படியல்ல,
அர்ப்பணிப்பு அப்படியே இருக்கும்.அதற்கு இலக்கொ ஒரு பொருட்டில்லை.நீங்கள் உள்ளபடியே அர்ப்பணிப்புணர்வுடன் இருப்பீர்களென்று சொன்னால் இலக்கை சென்றடைவது பற்றியெல்லாம்  கவலைப்படாமல் அதன் படிநிலைகளில் முழுவதுமாக ஒன்றியிருப்பீர்கள்.

எதிர்பார்ப்பு என்பது உங்களை குறுகிய எல்லைகளுடன் பிணைக்கக் கூடியது.ஆசைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன.
எனவே ஒரு சாதகர் தன் ஆன்மீகப் பாதையை அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள வேண்டுமே தவிர எதிர்பார்ப்புடன் மேற்கொள்ளக் கூடாது.எதிர்பார்ப்பு உங்களைப் பிணைத்திருக்கிறபோது நீங்கள் தேர்ந்தெடுத்த பாதையிலேயே உங்களுக்கு வெறுப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.ஆன்மீகத்தில் ஈடுபடும் பலரும் தங்கள் அகங்காரத்தைக் கரைக்க பெரிதும் முயல்கிறார்கள்.அந்த அளவுக்கு அர்ப்பணிப்பும் முக்கியம். 

பலரும் ஆன்மீகத்தில் ஒரு சாதகராக நுழைவதற்கு முன்னர் தங்கள் மார்க்கம் குறித்து ஏராளமான ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்கள்.இது மிகவும் சரியானது.ஆரோக்கியமானதும் கூட.

ஒரு பாதையில் நுழைவதற்கு முன்னர் அதுபற்றி கேள்வி கேட்க உங்களுக்கு முழு உரிமை உள்ளது.ஆனால் உங்கள் அகங்காரமானது கேள்விகளுக்கு உட்படவோ,கையாளப்படவோ,புதிய சூழலுக்குத் தக தன்னை மாற்றிக் கொள்ளவோ அனுமதிக்கவில்லையென்றால் அங்கேதான் சிக்கல் தொடங்குகிறது.அங்கேதான் உங்களை நீங்களே குழப்பிக் கொள்கிறீர்கள்.இந்த நேரத்தில் உங்கள் தெளிவு ஒன்றை உங்களுக்குச் சொல்கிறது.உங்கள் குழப்பங்கள் வேறொன்றைச் சொல்கின்றன.இது போன்ற நேரங்களில் உங்கள் சந்தேகங்களே உங்களை வழிநடத்துகின்றன.

ஆன்மீகத்திலும்,ஒரு குருவை அடைவதிலும் உங்களுக்குத் தீவிரமான தேடல் இருந்திருக்கும்.ஆனால் அதற்கான பாதையை அடைந்த பின்னர் உங்களின் நீண்டகால பழக்கங்களும் மனப்பான்மைகளும் அதனை முழுமையாக அனுபவிக்க விடாமல் தடைகளை ஏற்படுத்துகின்றன.

ஒரு குருவின் வழிகாட்டுதலோடு இதனை சரிசெய்யலாம்.ஆனால் உங்கள் தர்க்க ரீதியான புரிதலுக்கும் அனுபவத்திற்கும் இடையில் ஓர் ஒத்திசைவு ஏற்பட சற்றே நேரம் பிடிக்கும்.எனவே இதற்கு மிகவும் எளிமையான வழி, நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் பாதையை நேசிப்பதும் முழு அர்ப்பணிப்புணர்வுடன் பயணம் செய்வதுமே ஆகும்.

ஆன்மீகப் பயணம் ஒன்றில் ஈடுபபட்டு விட்டீர்களென்றால் அதே பாதையில் முழுமையாக இருங்கள். முழு அர்ப்பணிப்புணர்வுடன் ஈடுபடுங்கள்.அது எத்தகைய ஆனந்தத்தையும் தெளிவையும் உங்களுக்குத் தரும் என்பதை உணர்ந்து பார்த்தால்தான் தெரியும்.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

அன்பும் மகிழ்ச்சியும்

பாலரிஷி

Dedication and Spirituality


Dear Balarishi,Can you elaborate on the role of dedication in Spirituality? 









Dedication  is  something beyond  expectation .
When you choose to dedicate yourself to something which you  love ; whether you win or loose,whether u progress or slowly progress .. you would have a joy just by being in that path .

So many people love to reach a goal and that's something they long for .They would have put their passion, they  would have  worked hard.Once they reach the goal it would make them to think what next.Now this denotes that the passion for a goal is changeable .But dedication is something which remains the same .You don't just love the goal. In fact u don't even bother about a goal
Whether you reach or not , you just dedicate yourself in to that process ..
Expectation s a binding.It has its own limitation.Desires also keep changing.

A seeker should take up  spiritual life with  dedication and not with expectation! So when your expectation is binding you,there is a possibility for you
to develop hatred in the  path which you have chosen. Many work hard on their ego to attain spiritual goals.Dedication is equally important.
Some people make lots and lots of research in their the spiritual journey before getting in to the path as a seeker ! That is completely right and healthy

You Can judge something before entering in to it ! But After Entering at times when your ego is not comfortable to adapt , to be questioned , or to be treated ,there  the problem arises! It is there where you confuse yourself !Here your clarity tells you something and your doubts tells you something else and you tend to take more guidance from your confusion ..

 You might have had an intense search for a Guru and divinity !
You would have had real  thirst and once you really find a way,you are not able to enjoy as your longtime habits and attitudes  start troubling !

This can really be worked by a clear discussion with a guru's  guidance but it would take time to gel between your intellectual understanding and your experience !But the easiest best way is to love your journey with pure dedication!
This will also help you to cross your hidden blocks ! 

Once u know your spiritual journey,. stay there and move forward .
Dedicate yourself in to  it ! You will then know what kind of joy and clarity it can bring to you !

Happy new year !

LOVE

Sri Balarishi