Wednesday 31 July 2013

குருவாரம் குருவார்த்தை -38

சுவாசம்


 (பாலரிஷி எழுதிய ஆங்கிலக் கவிதையின் தமிழாக்கம்)

சுவாசம்... மனதுக்கும் விழிப்புணர்வுக்கும் பாலம் அமைக்கிறது
சுவாசம்... பாதையை வெளிப்படுத்துகிறது..மனதிலும் எண்ணங்களிலும்
இருக்கும் மடிப்புகளை சீராக்குகிறது
.
 

சுவாசம்.. சுட்டெரியும் ஆசையை சுட்டெரிக்கிறது,
உள்ளிருக்கும் சாரத்தைக் கண்டறியும் பொருட்டு கடைகிறது
 

சுவாசத்தின் சுவாசமே உண்மையும் ஞானமும்
சுவாசத்தின் சுவாசம் சிலருக்கோ ஒருமை
விழிப்புணர்வுள்ள சுவாசமே விடை.! அதுவே திறவுகோல்!
விழிப்புணர்வுள்ள சுவாசமே நாடகத்தை அர்த்தப்படுத்துகிறது.
 
 

சுவாசத்தின் சுவாசமே ஞானத்தின் கனல்.
சுவாசத்தின் சுவாசமே ஆனந்தத்தின் பாதை
பிராணசக்தியின் சுவாசமே தாண்டவ தாளம்
 

தாண்டவ தாளம்...தாண்டவ தாளம்..
உதயமாகையில் ...ஓங்கியெழுகையில்..
அதுவே உள்நிலை ஆனந்தத்தின் உயிர்சுவாசம்
 

 

1 comment:

Anonymous said...

இடதுகை வைத்து பிரணாயாமம் செய்யலாமா? தயவுசெய்து விளக்கவும். நன்றி.