Thursday 2 May 2013

குருவாரம் குருவார்த்தை-26

ஆன்மீகத்தின் வெளிப்பாடு பல நேரம் கவிதைகளாகவும் மலரும். பாலரிஷி அவர்களின் அழகிய கவிதையை இந்த வாரம் வெளியிடுவதில் மகிழ்கிறோம்.


வேஷத்திலிருந்து ஈசனுக்கு

வேஷம் அது அப்பட்டமோ?

ஊறிய அனுபவம் வேஷத்தின் வழியே:

அது அப்பட்டமான உண்மை

அடிபடாமல் புரிவதில்லை.
அனுபவம் பெற நாம் உடுத்தும் உடை வேஷம்.
வேஷம் என்றறிய வெவ்வேறு வேஷத்தில்
பொருத்திப் பொருத்தித் தாவுகிற மனம்:
வேஷம் தொலைக்க வேஷம் இட்டு இட்டு

உண்மையைத் தேடும் உயிர்;
இந்த வேஷத்தில் ஒரு நிஜம் இருக்கிறது.

அந்த நிஜம் அறியவே வெளிவேஷம்.

அந்த நிஜம் புரியவே பல வேஷம்.
வேஷம் அதன் எல்லையில் நிற்க,

உந்தும் உயிர் உந்தி உந்தி

திறந்தது  சிவானந்தம்

ஹர ஹர ஓம்

No comments: